Archives: ஜூன் 2017

மௌனம்

நிவாரணப்பொருட்களை ஏற்றி வந்த வண்டிகள், கடகடவென்ற சத்தத்தோடு, அக்கிராமத்தின் பழைய குடிசைகளை கடந்து சென்றபோது, அங்கிருந்த கோழிகளெல்லாம் பயந்து சிதறியோடின. காலணிகள் ஏதுமின்றி வெளியே இருந்த பிள்ளைகள் வண்டிகள் செல்வதை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தனர். மழையினால் சேதமடைந்த “இச்சாலையில்” வண்டிகள் செல்வது மிக அரிது.

திடீரென இவ்வண்டிகளுக்கு முன்பாக ஓரு பிரமாண்ட மாளிகை தென்பட்டது. அது அவ்வூர் மேயரின் வீடு. ஆனால் அவர் இப்பொழுது அங்கு குடியிருக்கவில்லை. தன் ஜனங்கள் அடிப்படை வசதிகள் ஏதுமின்றி தவித்துக்கொண்டிருக்கையில், அம்மேயர் வேறு ஊரில் ஆடம்பரமான சுகஜீவியத்தை அனுபவித்துக்கொண்டிருந்தார்.

இதுபோன்ற அநியாயங்கள் நம்மை கோபமடைய செய்கிறது. தேவனுடைய தீர்க்கத்தரிசிகளும் இவ்வாறு கோபம்கொண்டார்கள். ஆபகூக், மிகுந்த அநீதியையும் அட்டூழியத்தையும் கண்டபோது, “கர்த்தாவே, நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன், நீர் கேளாமலிருக்கிறீரே!” என தேவனை நோக்கி முறையிட்டான் (ஆப:1:2). ஆனால், கர்த்தரோ இதை ஏற்கனவே அறிந்திருந்தபடியினால், “தன்னுடையதல்லாததை தனக்காக சேர்த்துக் கொள்ளுகிறவனுக்கு ஐயோ...  தன் வீட்டுக்குப் பொல்லாத ஆதாயத்தை தேடுகிறவனுக்கு ஐயோ!” எனக் கூறினார் (2:6,9). நியாயத்தீர்ப்பு வந்துகொண்டிருந்தது!

தேவனுடைய நியாயத்தீர்ப்பு பிறர் மேல் வருவதை நாம் வரவேற்கிறோம். ஆனால் ஆபகூக் புத்தகத்தில் உள்ள ஒரு முக்கிய செய்தி நம்மை நிதானிக்க செய்யும். “கர்த்தரோவென்றால் தமது பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; பூமியெல்லாம் அவருக்கு முன்பாக மவுனமாயிருக் கக்கடவது,” (2:2௦) என்னும் வசனத்தில் “பூமி எல்லாம்” எனக் கூறப்பட்டுள்ளது. அதாவது ஒடுக்குகிறவர்களும் ஒடுக்கப்பட்டவர்களும். சில சமயம், மௌனமாய் இருக்கிற தேவனுக்கு முன்பாக நாமும் மௌனமாய் இருப்பதே ஏற்றதாயிருக்கும்!

ஏன் மௌனம்? ஏனென்றால் நாம் மிக எளிதாக நம்முடைய ஆவிக்குரிய வறுமையை காணத் தவறிவிடுகிறோம். ஆனால், தேவனுடைய பரிசுத்த சமூகத்தில் நாம் மௌனமாய் காத்திருக்கும் போது நம்முடைய பாவ சுபாவத்தை நாம் அறிந்துக்கொள்ளலாம்.

தேவன் மீது நம்பிக்கை வைக்க ஆபகூக் கற்றுகொண்டது போல, நாமும் கற்றுக்கொள்வோமாக. அவருடைய வழிகளையெல்லாம் நாம் அறியாதிருப்பினும், அவர் நல்லவர் என்பதை நாம் அறிந்திருக்கிறோமே. அவருடைய அதிகாரத்திற்கும் நேரத்திற்கும் அப்பாற்பட்டு எதுவுமில்லை.

ஆறுதலின் பாத்திரமாய்

என் தோழி, தான் வீட்டிலேயே செய்த சில மண்பாண்டங்களை எனக்கு தபால் மூலம் அனுப்பிவைத்தாள். அப்பார்சலை பிரித்து பார்த்தபோது, அதிலிருந்த விலைமதிப்பற்ற பொருட்கள் அனைத்தும் உடைந்திருக்க கண்டேன். அதில் ஒரு பாத்திரம், பல பெரிய துண்டுகளாகவும், சில்லுகளாகவும், தூசியும் மண்ணும் கலந்த உருண்டைகளாகவும் நொறுங்கிப்போயிருந்தது.

ஆனால், உடைந்துபோன அப்பாத்திரத்தை என் கணவர் பசையிட்டு ஒட்டிய பிறகு, அழகான பாத்திரமாக மாறிற்று. பல விரிசல்களை கொண்ட அவ்வழகிய பாத்திரத்தை, அனைவரும் காணும்படி நான் அலமாரியிலே வைத்தேன். ஒட்டப்பட்ட அப்பாத்திரத்தில் உள்ள விரிசல்களைப் போலவே, பல கடினமான சமயங்களை நான் கடந்து வந்த போது ஏற்பட்ட வடுக்கள், எனக்கும் உண்டு.  நான் அச்சூழ்நிலைகளைக் கடந்து வரவும், இன்றும் பலத்தோடு நிற்கவும், தேவனே உதவி செய்தார். துன்ப வேளையில் தேவன் என் வாழ்விலும் என் மூலம் மற்றவர்களுக்கும் செய்த நன்மைகளை நான் பிறரிடம் பகிர்வதின் மூலம், துன்பப்படுகிற அநேகருக்கு நான் ஆறுதலளிக்கும் பாத்திரமாக இருக்க முடியும் என்பதை அப்பாத்திரம் எனக்கு நினைவூட்டியது.

நம்முடைய தேவன் இரக்கமும் ஆறுதலும் அளிப்பவராய் இருப்பதால், “இரக்கங்களின் பிதாவும் சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம்,” என அப்போஸ்தலனாகிய பவுல் தேவனை போற்றி துதிக்கிறார் (2 கொரி. 1:3). நாம் தேவனைப்போல மாறுவதற்கு, நம்முடைய சோதனைகளையும் பாடுகளையும் ஒரு கருவியாக தேவன் பயன் படுத்துகிறார். நம்முடைய சோதனை வேளையில், தேவன் நமக்களித்த ஆறுதலைக்கொண்டு, உபத்திரவத்தில் இருக்கும் அநேகருக்கு நாம் ஆறுதலளிக்கமுடியும் (வச. 4).

கிறிஸ்துவின் பாடுகளை நாம் எண்ணிப் பார்ப்போமானால், துயரத்தின் மத்தியிலும் நாம் ஆறுதலடைந்து, தேவன்மேல் நம்பிக்கை வைத்து, விடாமுயற்சியுடன் பாடுகளை சகிப்போம். அப்பொழுது தேவன் நம்முடைய அனுபவங்களைக் கொண்டு பாடுகள் மத்தியில் இருக்கும் அநேகருக்கு ஆறுதல் அளிப்பார் (வச 5-7). தேவன் நம்முடைய பாடுகளை எல்லாம் அவருடைய மகிமைக்கென்று மீட்டுக்கொண்டுள்ளார் என்பதை பவுல் அறிந்ததினால் ஆறுதலடைந்தது போல நாமும் ஆறுதலடைவோமாக. தேவன் நமக்களிக்கும் ஆறுதலின் பாத்திரத்தை துயரப்படுகிறவர்களோடு பகிர்ந்து, அவர்களுக்கு உறுதியான நம்பிக்கையை அளிப்போமாக.

புன்னகைக்க ஒரு காரணம்

வேலை ஸ்தலத்திலே, நம்மை ஊக்குவிக்கும் வார்த்தைகள் மிக அவசியமானது. ஊழியர்களின் உரையாடல்கள், அந்நிறுவனத்தின் லாபம், மற்றும் வாடிக்கையாளர்களின் மனநிறைவு, மற்றும் சக ஊழியரின் அங்கீகாரம் பாராட்டு, ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும். நன்கு செயல்படக் கூடிய குழுக்கள், அதிருப்தி, எதிர்ப்பு, பரிகாசம், ஆகியவற்றைக் காட்டிலும், ஆறு மடங்கு நம்பிக்கையூட்டும் ஆக்கப்பூர்வமான வார்த்தைகளை உபயோகிப்பதாக, ஆய்வுகள் வெளிப்படுத்துகிறது. அதேசமயம், மோசமாக செயல்படும் குழுக்கள், ஒவ்வொரு நன்மையான வார்த்தைக்கும், மூன்று மடங்கு அதிக எதிர்மறையான கருத்துகளையே உபயோகிக்கிறார்கள்.

உறவுகள் கட்டப்படுவதற்கும், நல்ல விளைவுகளை காணவும், வார்த்தைகள் எவ்வளவு

முக்கியமானவைகள் என்பதை, தன் அனுபவத்தின் மூலம் பவுல் கற்றறிந்தான். தமஸ்கு பட்டணத்திற்கு செல்லும் வழியிலே, இயேசுவை சந்திக்கும் முன்பு, தன் வார்த்தையினாலும் செயல்களினாலும், இயேசுவை பின்பற்றுகிறவர்களை அச்சுறுத்தி உபத்திரவப்படுத்தினான். ஆனால், அவன் தெசலோனியர்களுக்கு கடிதம் எழுதும் காலக்கட்டதிற்குள்ளாக, தேவன் அவன் இருதயத்திலே செய்த கிரியையினாலே, பிறரை மிகுதியாய் ஊக்குவிப்பவனாக மாறிப்போனான். மேலும், தன்னை உதாரணமாக ஏற்றுக்கொண்டு, நாம் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தும்படி வேண்டினான். ஆயினும், முகஸ்துதியை தவிர்க்க ஜாக்கிரத்தையாக இருக்கவும்,  கிறிஸ்துவின் ஆவியை பிரதிபலித்து, பிறரை நல் வார்த்தையினால் ஊக்குவிக்க கற்றுத் தந்தான்.

நாம் பிறரை ஊக்குவிக்க, நமக்கு தேவையான பெலனை தேவனிடமிருந்து பெற்றுக்கொள்கிறோம் என்பதை பவுல் நினைவுகூருகிறான். நம்மை மிகுதியாய் நேசித்து, நமக்காக மரித்த இயேசுவிடம், நம்மை முற்றிலுமாக ஒப்படைத்து, அவர் மூலம் நாம் பிறரை ஆற்றவும் தேற்றவும் மன்னிக்கவும் ஊக்குவிக்கவும் நேசிக்கவும் செய்வோமாக (1 தெச. 5:1௦-11).

நாம் ஒருவருக்கொருவர் உதவுவதின் மூலம், தேவனுடைய பொறுமையையும் நன்மையையும் ருசிபார்க்க அறிந்துகொள்ளக் கூடும் என்பதை, பவுல் நமக்கு காண்பிக்கிறார்.

தேவனால் ஊக்குவிக்கப்பட்ட வாழ்வு!

சில மாதங்களுக்கு முன்பு, “ஊக்கமிக்க மனிதர்கள்” என்னும் சங்கத்திலிருந்து, அச்சங்கத்திலே நான் சேரும்படி, மின்னஞ்சல் மூலம் எனக்கு ஒரு அழைப்பு வந்தது. அப்பொழுது ‘ஊக்கமிக்க’ என்னும் வார்த்தையின் முழுமையான அர்த்தத்தை  நான் அறிந்துகொள்ள முனைந்தபொழுது, ‘ஒரு ஊக்கமிக்க மனிதன், வெற்றிபெறவேண்டும் என்ற முனைப்போடு, அதற்கான இலக்குகளை அடைய, விடாமுயற்சியோடு, கடினமாக உழைக்கக்கூடியவன்’ என்பதை நான் அறிந்தேன்.

ஊக்கமிக்க மனிதனாய் இருப்பது நலமானதா? அதை அறிந்துகொள்ள, “புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்,” என்னும் வசனத்தின் அடிப்படையில் சோதித்து அறியலாம் (1 கொரி. 1௦:31). ஏனென்றால், அநேகந்தரம், நம்முடைய சுயமகிமைக்கென்றே அநேக காரியங்களை நாம் செய்கிறோம்.

நோவாவின் காலத்தில் உண்டான பெருவெள்ளத்திற்கு பிறகு, “நமக்கு பேர் உண்டாகப்பண்ணுவோம்,” (ஆதி. 11:4) என கூறிக்கொண்டு, மனுஷர் தங்கள் மகிமைக்கென்று ஒரு வானளாவிய கோபுரத்தை கட்ட தீர்மானித்தார்கள். தாங்கள் பூமியெங்கும் சிதறிப் போகாமல் இருக்கவும், புகழ்ச்சியடையவும் விரும்பினார்கள். அவர்கள் தவறான ஊக்கத்தினால் செயல்பட்டார்கள். தேவனுடைய மகிமைக்கென்று அதை செய்யாமல், தங்களுடைய புகழ்ச்சிக்காகவே அதைச் செய்தார்கள்.

அதற்கு எதிர்மாறாக, சாலொமோன் ராஜா, உடன்படிக்கைப் பெட்டியையும் புதிதாக கட்டப்பட்ட தேவாலயத்தையும் பிரதிஷ்டை பண்ணும்பொழுது, “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டினேன்”, என்று கூறினார் (1இரா:8:2௦). மேலும், “நாம் அவருடைய கற்பனைகளையும், அவருடைய கட்டளைகளையும்... கைக்கொள்ளுகிறதற்கு நம்முடைய இருதயத்தைத் தம்மிடத்தில் சாயப்பண்ணுவாரக”, என வேண்டுதல் செய்தார் (வச:58).

தேவனை மகிமைப்படுத்துவதும், அவருடைய வழிகளில் நடப்பதுமே நம்முடைய பெரிதான வாஞ்சையாய் இருந்தால், பரிசுத்த ஆவியானவரின் வல்லமையோடு, இயேசுவை நேசிக்கவும் சேவிக்கவும்வல்ல ஊக்கமுள்ள மக்களாக நாம் மாறிவிடுவோம். சாலொமோனின் ஜெபம், நம்முடைய ஜெபமாய் மாறுவதாக. “அவர் கட்டளைகளில் நடந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்ள, [நம்] இருதயம் நம்முடைய தேவனாகிய கர்த்தரோடு உத்தமமாய் இருக்கக்கடவது” (வச. 61).